CSK: ‘இந்த 2 சிஎஸ்கே வீரர்களுக்கு’…விரைவில் இந்திய அணியில் இடம் கிடைக்கும்: முன்னாள் வீரர் பளிச்!


CSK: ‘இந்த 2 சிஎஸ்கே வீரர்களுக்கு’…விரைவில் இந்திய அணியில் இடம் கிடைக்கும்: முன்னாள் வீரர் பளிச்!


ஐபிஎல் 15ஆவது சீசன், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில் இளம் வீரர்கள், மூத்த வீரர்கள் என பலர் தொடர்ந்து சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

டி நடராஜன், உம்ரான் மாலிக், சஹல், குல்தீப், முகேஷ் சௌத்ரி, உமேஷ் யாதவ் போன்றவர்கள் தொடர்ந்து சிறந்த பங்களிப்பை வழங்கி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

பிளே ஆஃப் வாய்ப்பு இல்லை:

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 15ஆவது சீசனில் தொடர்ந்து படுமோசமாக செயல்பட்டு பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. மேலும் ருதுராஜ், ஜடேஜா, அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா போன்றவர்கள் தொடர்ந்து படுமோசமாக விளையாடி, பார்ம் அவுட்டும் ஆகி விட்டார்கள். இருப்பினும் அணிக்கு நம்பிக்கையளிக்கக் கூடிய வகையில் இரண்டு இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் முகேஷ் சௌத்ரி, சமர்ஜித் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

2 வீரர்கள் அபாரம்:

முகேஷ் சௌத்ரி, குஜராத் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்புவரை 12 போட்டிகளின் பவர்பிளேவில் 16 விக்கெட்களை வீழ்த்தி, தீபக் சஹார் இல்லாத குறையை நிவர்த்தி செய்துள்ளார். அடுத்த சீசனில் தீபக் வந்த பிறகு, இருவரும் பவர் பிளேவில் மிரட்டலாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சமர்ஜித் சிங்கிற்கு துவக்கம் முதலே வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இருப்பினும், வாய்ப்பு கிடைத்தப் பிறகு தொடர்ச்சியாக அபாரமாக பந்துவீசி வருகிறார்.

தோனி புகழாரம்:

சிஎஸ்கே கேப்டன் மகேந்திரசிங் தோனி கூட முகேஷ் சௌத்ரி, சமர்ஜித் சிங் ஆகிய இருவருடன் பந்துவீச்சை பாராட்டி பேசியிருக்கிறார். இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள இந்திய அணி முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா, இந்த இரண்டு இளம் வேகப்பந்து வீச்சாளர்களை புகழ்ந்து பேசியுள்ளார்.

குப்தா பேட்டி:

அதில், “சிஎஸ்கே தரான இளம் வீரர்களை உருவாக்கி, அவர்களுக்கு நல்லமுறையில் வழிகளை காட்டி, பெரிய வீரர்களை மாற்றியிருக்கிறது. முகேஷ் சௌத்ரி, சமர்ஜித் சிங்கிடம் தோனி ஏதோ ஒரு சிறப்பை பார்த்திருக்கிறார். இதனால்தான், தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்து வருகிறார். நல்ல வழிகாட்டுதல் மூலம் சமர்ஜித் சிங் ஆட்டத்தை இன்னமும் மேம்படுத்த முடியும். தற்போது சௌத்ரி, சமர்ஜித் இருவரும் சிஎஸ்கேவின் முக்கிய பௌலராக திகழ்ந்து வருகிறார்கள். இவர்கள் விரைவில் இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது” எனக் கூறினார்.

Comments

Popular posts from this blog

Ireland rsquo s First Vegan Grocery Store Opens in Dublin