கிரீன் டீயை நீங்கள் குடிக்கும் முறை தவறு..! எப்படி தெரியுமா..? பல விதமான தேநீர் வகைகளில் கிரீன் டீ எனப்படும் பச்சை தேயிலைக்கு முதன்மையான இடம் உள்ளது. பிராசஸ் செய்யப்படாத தேநீர் வகையில் ஃப்ளூவனாய்ட்ஸ் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. கிரீன் டீ எடை குறைப்பது முதல் இளமையை தக்க வைப்பது வரை பல விஷயங்களுக்கு உதவியாக இருக்கிறது. ஆனால் கிரீன் டீயின் நன்மைகளை முழுமையாகப் பெற கிரீன் டீயை எப்படி எல்லாம் குடிக்க கூடாது என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது, அதைப் பற்றி இங்கே பார்க்கலாம். சாப்பிட்ட பிறகு கிரீன் டீயை குடிக்கக் கூடாது : உணவு சாப்பிட்ட பிறகு கிரீன் டீயை குடிப்பது செரிமானத்தை எளிதாக்கி கொழுப்பை குறைக்க உதவும் என்று பலரும் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், சாப்பிட்ட பிறகு கிரீன் டீ குடிப்பதால் உணவில் இருக்கும் புரதம் செரிமானம் ஆகாது. எனவே அதை தவிர்த்து விடவேண்டும். கிரீன் டீயை சூடாக குடிக்கக் கூடாது : புத்துணர்ச்சி ஊட்டும் தேநீரை பலரும் சுடச்சுட குடிக்க விரும்புவார்கள். ஆனால் கிரீன் டீயை பொறுத்தவரை மிதமான சூட்டில் தான் குடிக்க வேண்டும். சூடாக குடிப்பது...
மகனை கொன்று மூட்டைக்கட்டி வீசிய தந்தை: கோபிச்செட்டிப்பாளையத்தில் கொடூரம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை சொந்த தந்தையே கொலை செய்து மூட்டையில் கட்டி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள நிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவர் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு பெரியசாமி என்ற மகன் இருந்தார். திருமணம் ஆகாத நிலையில் இவர் தந்தையுடனே வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தோட்டத்தில் விவசாயம் செய்ய கிணற்றில் தண்ணீர் போதிய அளவு இல்லாததால் காளியப்பனின் மகன் பெரியசாமி தண்ணீர் தேவைக்காக தோட்டத்தில் போர்வெல் அமைக்கலாம் என்று எண்ணி, அதற்காக ரூ ஒரு லட்சம் பணத்தை தனது தந்தை காளியப்பனிடம் கேட்டுள்ளார். ஆனால் காளியப்பன் மகனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி இரவு தந்தை மகன் இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாத்தில் மகன் பெரியசாமி தனது தந்தையை தாக்க முயற்சித்துள்ளார். அவரிடமிருந்து தப்பிப்பதற்காக காளியப்பன் தனது மகன் பெரியசாமியை கீழே தள்ளிவிட்டபோது அங்கிருத...
ட்விட்டரின் எதிர்காலம் உறுதியற்றது..ஊழியர்களிடம் மனம் திறந்த பராக் அகர்வால் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை முதலில் வாங்கிய உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், பின்னர் அனைத்து பங்குகளையும் வாங்க முன்வந்தார். ஒரு பங்கு 54.2 அமெரிக்க டாலர் என ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையில் 4,400 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு, ரூ.3.37 லட்சம் கோடி ஆகும். ட்விட்டர் நிறுவனம் கைமாறவுள்ள நிலையில் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரியான பராக் அகர்வால் , ஊழியர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், நிர்வாகம் முழுமையாகக் கைமாற 6 மாதங்கள் வரை ஆகலாம் எனவும், ’இப்போது’ வரை யாரும் வேலை நீக்கம் செய்யப்படுவதற்கான சூழல் ஏற்படவில்லை எனவும் கூறினார். நிறுவனம் முழுமையாகக் கைமாறிய பின் அது எந்த திசையில் செல்லும் என்பது தெரியாது எனக் குறிப்பிட்ட பராக் அகர்வால், ட்விட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது எனவும் தெரிவித்தார். மேலும் படிக்க | எலோன் மஸ்க் வசம் செல்லும் ட்விட்டர்; மஸ்க் பதிவு செய்த முதல் ட்வீட் விரைவில் எலான் மஸ்க் ட்விட்டர் ஊழி...
Comments
Post a Comment